என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label மல்லிகை. Show all posts
Showing posts with label மல்லிகை. Show all posts

மனம் என்னும் மேடையிலே..

மல்லிகை ஆண்டு இதழுக்காக அனுப்பிய கவிதை.



னம் என்னும் மேடையிலே
பல நாடகங்கள் நடக்குதப்பா...
உணர்வுகளின் நாடகத்தில்
மனிதம் மட்டும் நடிக்குதம்மா..

திருவாளர் கோடீஸ்வரர்
தெரு ஓடு ஏந்துராறு..
ஆரோக்கிய நாதன் இங்கே
ஆஸ்த்துமாவில் இருமுறாரு..

எண்களை கண்டுபிடித்துவிட்டு
எண் சோதிடம் பாக்கிறாய்..
நீ கண்டது சரி என்று
எப்படி தான் நினைக்கிறாய்....??

புருஷனை கொன்று விட்டு 
விதவை என்கிறாய்.. 
அவளையும் தின்று விட்டு 
விபச்சாரி ஆக்குறாய்..

கணவனை விட்டு விட்டு 
கள்ளமாய் திரிகிறாய் ...
பிள்ளையை தனிய விட்டு 
அநாதை என்கிறாய்....

உடையார் வம்சத்துக்கு
கலப்பிலே ஒரு வாரிசு..
அப்பன் மாரிக்கு மூத்தது 
அந்தோணி, இளையது முகமது..

சாதி மதம் கலந்த பின்னும் 
பிரிக்கத்தான் நினைக்குறாய்..
சந்தோஷ வீட்டில் ஏன்,
தீயள்ளி வைக்கிறாய்..

நான் என்ற சொல்லை விட்டு 
நாம் என்று கூறி எந்த 
நாடகத்தை முடித்துவிடு.. இல்லை
நடித்து நடித்து மனிதம் செத்து
பிணம் தின்னும் கூட்டம் 
பிறந்துவிடும் இங்கு ..!!!

தமிழ் நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...