என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

மீண்டும் பதற்றமான சூழல்...



மனிதாபிமானத்தை
கைப்பற்றுவதற்காய்
மூன்றாம் உலகப்போர்..

தாய்மொழியின்
படுகொலையை கண்டித்து
ஐந்தாவது ஈழப்போர்...

குடி நீர் பெற
படையெடுப்பு..
உணவுக்காய்
மௌன போராட்டம்...

அன்பை தேடி
நடை பயணம்....
வறுமை ஒழிக்க
உண்ணாவிரதம்....

கலாச்சாரம் வாழ
மனித சங்கிலி...
மரங்களை காக்க
பசுமை புரட்சி...

மீண்டும் 
பதற்றமான சூழல் ஆரம்பம்....
தோழர்களே...
வழமைபோல் பதுங்கிவிடுங்கள்..

காணமல் போன பட்டியலில்
ஒற்றுமையும் சேரட்டும்...

-தமிழ்நிலா-

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...