என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

நட்பும் நட்பும் காதல் செய்தது....



எனக்கும் என் தோழி உனக்கும்
இடையில் ஒரு காதலிருந்தது..
காதல் என்றால்..??

யுகங்கள் தவமிருக்கும் ஞானிக்கு
காட்சி தரும் தேவதையாய் நீ 
பிறவிக் குருடனுக்கு கிடைத்த
ஒரு நிமிட பார்வை போல
எப்படியோ நீ ..

பாலைவன மணல் மீது விழும்
சிறு தூறல் போல உன் அன்பு
தெரியாமலே வீசியிருந்தது...
தொடர் தோல்விக்குப் பின் பெறும்
முதல் வெற்றி உன் பாசம்
தெரியாமலே கிடைத்திருந்தது...

கனவுகளை 
திருடிக்கொண்டிருந்த தனிமையின்
கற்பனைகளை
திருடிக்கொண்டிருந்தது கவிதை....

வார்த்தைகள் உரசிக்கொள்ளும் இரவின்
கவிதைகளில் இருந்து பிறக்கிறது
உனக்கும் எனக்குமான நட்பு...

இருட்டை உடைத்து
உனக்கும் எனக்கும்
ஒரு நட்பினை செய்தேன்..

நானும் நீயும் நட்பு செய்தோம்...
நட்பும் நட்பும் காதல் செய்தது....

காதல் போன தெருவில்
நீயும் நானும் கைவீசி நடந்தோம்...
தெருவில்போகும் யாரையும் கண்டு
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..
ஏனெனில்

உன் நட்பை
என் நட்பு காதல் செய்தது
அது தான் உண்மை....
அது மட்டும் தான் உண்மை...

பார்வைகள் கூட தொட்டுவிடாத
தூரத்தில் தான் நீ...
காதல் திரையினை விலக்கியே
தோழி உன்னை பார்த்தேன்...
என் வாழ்வின் இறந்தகாலத்தின்
வசந்த காலம் நீ...

உன் நினைவுகளைத் தின்று
பசியாறுகிறது என் கவிதைகள்..
என் கண்நீரைக்குடித்து 
தாகம் தீர்க்கிறது காலம்...

அதே புன்னகையுடனும்,
நலமா? என்ற கேள்வியுடனும்
நேற்றும் தோன்றி மறைந்தது
உனக்கும்
எனக்குமிடையில் இருந்து
தொலைந்து போன எம் நட்பு...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

Unknown said...

அருமை

Sanjay Thamilnila said...

நன்றி Gnanam sekar ஐயா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...