என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label 2010. Show all posts
Showing posts with label 2010. Show all posts

ஒரு இரவில் இருண்டது எம் வாழ்வு.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் போர் கால வடுக்கள் போகாது. மீண்டும் வளருமா எம் பொருளாதார வளம். போர்காலத்தில் அங்கே சிக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அன்று எழுதியது. 


னை மரத்தோப்பே...
பழகிய தெருவே சுகமா....
பச்சை சொர்க்கமே,
பனி விழும் பூவே நலமா...
மீண்டுவந்தேன் மீளவும்
நான் அம்மா....கையிழந்த 
தனி மரமா....!!!

நேற்றிருந்தோம் வீட்டினிலே...
சேர்ந்திருந்தோம் முற்றத்திலே...
விழித்திருந்தோம் இரவினிலே...
விடியும் முன்னே தனித்துவிட்டோம்
இரு உயிரை பிரிந்துவிட்டோம்....!!

இடம்தேடி நாம் நடந்து 
கால் தளர்ந்து போகையிலே...
கோயில் மடம் இருக்கு 
இளைப்பாற போய் இருக்க,
விழுந்தகுண்டிநிலே நாலுயிரை
அம்மனுக்கு பலி கொடுத்தோம்...!!

விடியம் இரவென்று காத்திருக்க
காட்டு நரிக்கூட்டம் கட்டவிழ்து
வருதென்று.. கால் போகும் இடம்
எங்கும் கையாலே தான் போனோம்...!!

பூச்சிக்கும் புல்லுக்குமம் மருந்தடிக்க
அஞ்சியோடும் எம் குழந்தைகளுக்கு
நச்சு புகையடிச்சு கருக்கிப்போன கயவரை
கண்டும் காப்பாற்ற முடியாம தவித்தோம்..

பாதுகாப்பு வலயம் என்று முள்ளுக்கம்பி
கட்டிவைச்சு நாளும் உயிர் கொன்று
சதை தின்னும் புத்தம் தெரிந்த ஆசாமிகளை
இன்னும் ஏன் விட்டு வைத்தோம்.....???

தமிழ்நிலா

காற்றுவெளி December 2010

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

கறை படிந்த சிறகுகள்...

வஞ்சம் தீர்க்கப்பட்ட வன்னி மக்களின் இன்றய நிலை... மீள திரும்பாத மாணவர் மனநிலைகள்... எதிர்காலம் எரிக்கப்பட்ட இளஞர் யுவதிகள்... 



றப்பதற்கு சிறகிருந்தும்
நுடக்க முடியா எம் உறவுகள்
சத்தம் ஒன்று கேட்டாலே
பறந்து போகும் குருவிகள்... இது
ஏனோ தெரியவில்லை...!!

தினம் எண்ணி எண்ணி
செத்துப்போகும் இளசுகள்..
பெரும் காடாய் போன
தமிழ் பள்ளிகள்....
பள்ளி செல்ல முடியா
சிறிசுகள்... இது தான் எம்
சாபமோ தெரியவில்லை...!!

புத்தகம் இல்லா பைகளும்
மையே இல்லா பேனைகளும்
இரத்தம் படிந்த சீருடைகளும்
இது தான் இனி வாழ்கையோ
ஏனக்கு தெரியவில்லை...!!

கதிரைகள் இல்லா மேசைகளும்
மேசைகள் இல்லா கதிரைகளும்
தரையே கதிரையாய் மாறும்
சில நேரங்களும்... இது விதியா
அல்ல சதியா ஒன்றும் தெரியவில்லை..!!

கொட்டில்கள் இனி வகுப்பாய் போக
கைகள் இனி கால்களாய் போக
சோதனையில் வாடும் எம்மை
சோதனைகளும் விடவில்லை...
காரணமும் தெரியவில்லை...!!

பேய்க்காட்டும் பொய் கோலம் 
நிவாரணமும்... எம் 
பிள்ளைகள் பசியால்
சதா ரணமும்.. இது எல்லாம்
எவனுக்கோ சாதாரணமாய்
போனது ஏனோ தெரியவில்லை....!!

தமிழ்நிலா 

காற்றுவெளி November 2010

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

ஒரு கைதியின் டைரியில் இருந்து..



கடத்தப்பட்டு, காணாமல் போய் கைது செய்யப்பட்ட, சிறைகளிலும் தடுப்பு முகாங்களிலும் வாழும் மக்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் விடுதலை என்று அறிவிக்கப்பட்ட மகிழ்சியில்...




என் பாசமுள்ள அம்மாவுக்கு
ஒரு பாச மடல்.......
அம்மா நலமா?

யாழ்ப்பாணம் பார்த்து
ஐயிரண்டு வருடம் அம்மா...!!
இங்கு வரும் பேப்பர் எலாம்
யாழ் செய்தி சொல்லும் அம்மா ... ??

தமிழினத்தை கொல்றாங்களாம்
தினம் தினம் சொல்லுறாங்கள்..
இப்பவும் நடக்குதாம்மா...
தமிழனுக்கு உரிமை கிடைச்சுதாம்மா???

A9 ம் திறந்தாச்சாம்
யாழ் தேவியும் வரப்போதாம்.....!!
யாழ்ப்பாணம் நான் வர
நீ இருக்கணும் எனக்காக.....
காணமல் போன உன் மகன்
உயிரோடு உள்ளேன் அம்மா......!!

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்தி விட்டாய்...
நாற்பது வயதுக்கு மேல் ஆகி இருக்கும்
என் அம்மா உனக்கு....

நீ பெத்த மகளுக்கு - இந்த
அண்ணனை நினைவிருக்க ..??
என் பெயர் சொல்வதுண்டா....???
அவள் கல்யாணத்துக்கு எனும்
வருவேனா சொல் அம்மா...??

கடத்தப்பட்ட காரணம் தெரியாமலே...
கடந்ததமா பத்து வருஷம்....
ஒவொரு நாளும் விடியும் போது
எங்களுக்கு விடியாத என்று
இருக்குதம்மா...!!!

பத்து வருசத்தில் எத்தனையோ
நண்பர் அம்மா...!!
வருவதும் போவதும்...
அன்றாட வழக்கம் அம்மா...!!!

போனவர்கள் இங்கு என்று
யாருக்கும் தெரியாதம்மா...!!
யாரேனும் வந்து என் செய்தி
சொன்னதுண்டா..????

நாளை வருவான் என்று எண்ணி
நாட்களை கடத்திடம்மா...
நிச்சயம் ஒரு நாள் வருவேன்
அரசியல் கைதிகளுக்கு மறுவாழ்வாம்....!!

தமிழ்நிலா

காற்றுவெளி October 2010 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

என்ன இந்த வாழ்கையோ..... ?

எனக்கு வாழ்க்கை கசக்கிறது அதை சுவைக்க கவியாக்கினேன் உவர்க்கின்றது கண்ணீர் வந்து. இது எல்லாம் மாறுமா??



மேகம் இல்லா வானை கண்டேன்,
நிலவே இல்லா இரவை கண்டேன்,
மண்ணை தொடாத மழையை கண்டேன்,
கடலை சேரா நதியை கண்டேன்...!!

குரலை மறந்த குயிலை கண்டேன்,
கால்கள் இழந்த மயிலை கண்டேன்,
கூட்டை தொலைத்த குருவிகள் கண்டேன்,
வீடே இல்லா உலகினை கண்டேன்.....!!

இலைகள் அற்ற கிளைகள் கண்டேன்,
மொட்டு வராத மரத்தை கண்டேன்,
மணமே இல்லா மலரினை கண்டேன்,
விதைகள் வராத கனிகளை கண்டேன்...!!

இசையே இல்லா ஸ்வரங்கள் கண்டேன்,
தாளம் மறந்த பாட்டை கண்டேன்,
துளையே இல்லா குழல்கள் கண்டேன்,
தந்தி அறுந்த வீணையைக் கண்டேன்......!!!

தந்தையை இழந்த பிள்ளையை கண்டேன்,
பிள்ளையை பிரிந்த தாயை கண்டேன்,
கணவனை மறந்த காரிகை கண்டேன்,
கற்பை தொலைத்த பெண்களை கண்டேன்....!!

நன்றி மறந்த நண்பர்களை கண்டேன்,
ஆயுள் குறைந்த மிருகம் கண்டேன்,
புத்தகம் இல்லா நூலகம் கண்டேன்,
நீதி இல்லா சட்டத்தை கண்டேன்....!!

கத்தி திரியும் கயவர் கண்டேன்,
எட்டி உதையும் உயர்ந்தவர் கண்டேன்,
தலையே இல்லா உடல்களை கண்டேன்,
மனிதம் செத்த உயிர்களை கண்டேன்....!!

தமிழ் நிலா


காற்றுவெளி September 2010

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

மகனே நீ உறங்கு...!!

மக்கள் முகாம்களில் அடைக்கப்படடு, முட்கம்பிக்குள் வாழ்ந்து ஆண்டொன்று முடிந்தும் அதன் வடுக்கள் மாறவில்லை... தடங்கள் அழியவில்லை...ஒரு தாயின் தாலாட்டாய் போன சோகம்...



கனே நீ உறங்கு...!!
(தாயின் தாலாட்டு)

சந்தன பூமியடா இது
குண்டு விழுந்ததால்
கந்தக பூமியடா...
வீர பூமியடா இது
காட்டி கொடுத்ததனால்
துரோக பூமியடா...

மகனே நீ உறங்கு....

நெல் விளைந்ததால்
செல்வந்த தேசமடா...
செல் விழுந்ததால் இன்று
பிணம் விளைந்திட்ட தேசமடா...
காற்றிலும் ரத்த வாசமடா...

சுமங்கலி பெண்கள்
விதவைகளடா...
கன்னிகள் கூட கர்ப்பிணிகளடா..
கர்பினிகளையே கற்பழித்த
கயவரடா...இவர் நெஞ்சம்
பிளந்திடும் நாள் ஏதுடா...

என் மண்ணில் நான்
அகதியடா.. உன்
தந்தையை இழந்ததால் நான்
அனாதையடா...
எம் சொந்தம் எல்லாம் முள்
கம்பிக்குள் தானடா...
உடன் பிறப்புகளோ தடுப்பு
முகாம்களின் உள்ளடா...

பிணத்தோடு இருந்தோம்
சில காலம்...
பசியோடு படுத்தோம்
பல மாதம்....
பயத்தோடு வாழ்கிறோம்
நெடுங்காலம்...
இனி எப்போது எமக்கு
விடிகாலம் ...

பள்ளிகள் எல்லாம்
முகம்களடா...
ஆலயங்கள் எல்லாம்
மயானங்களடா...
மைதானங்கள் கூட
தளங்களடா.....
கால் வைக்கும் இடம் எல்லாம்
கண்ணிகள் வெடிக்குமடா..

எம் உறவிழந்து ஆண்டு ஒன்று,
தமிழ் மண் மீளும் நாள் எது....
மகனே நீ உறங்கு....

தமிழ் நிலா

காற்றுவெளி August 2010

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...