எத்தனை வருடங்கள் கடந்தாலும் போர் கால வடுக்கள் போகாது. மீண்டும் வளருமா எம் பொருளாதார வளம். போர்காலத்தில் அங்கே சிக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அன்று எழுதியது.

பனை மரத்தோப்பே...
பழகிய தெருவே சுகமா....
பச்சை சொர்க்கமே,
பனி விழும் பூவே நலமா...
மீண்டுவந்தேன் மீளவும்
நான் அம்மா....கையிழந்த
தனி மரமா....!!!
நேற்றிருந்தோம் வீட்டினிலே...
சேர்ந்திருந்தோம் முற்றத்திலே...
விழித்திருந்தோம் இரவினிலே...
விடியும் முன்னே தனித்துவிட்டோம்
இரு உயிரை பிரிந்துவிட்டோம்....!!
இடம்தேடி நாம் நடந்து
கால் தளர்ந்து போகையிலே...
கோயில் மடம் இருக்கு
இளைப்பாற போய் இருக்க,
விழுந்தகுண்டிநிலே நாலுயிரை
அம்மனுக்கு பலி கொடுத்தோம்...!!
விடியம் இரவென்று காத்திருக்க
காட்டு நரிக்கூட்டம் கட்டவிழ்து
வருதென்று.. கால் போகும் இடம்
எங்கும் கையாலே தான் போனோம்...!!
பூச்சிக்கும் புல்லுக்குமம் மருந்தடிக்க
அஞ்சியோடும் எம் குழந்தைகளுக்கு
நச்சு புகையடிச்சு கருக்கிப்போன கயவரை
கண்டும் காப்பாற்ற முடியாம தவித்தோம்..
பாதுகாப்பு வலயம் என்று முள்ளுக்கம்பி
கட்டிவைச்சு நாளும் உயிர் கொன்று
சதை தின்னும் புத்தம் தெரிந்த ஆசாமிகளை
இன்னும் ஏன் விட்டு வைத்தோம்.....???
தமிழ்நிலா
காற்றுவெளி December 2010
காற்றுவெளி December 2010



Tody Now