என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

புத்தாண்டே..

புத்தாண்டில் ஒரு சிறுமியின்..கனவாக...


புதுமைகள் புரிய 
வந்த புத்தாண்டே..
உன் புதுமைகள் என்ன 
சொல்லாண்டே..

இரவினில் பிறக்கிறாய்..
உன் பிறந்தநாள்...1.1.11 
அட இது கூட புதுமை எல்லோ
உன் பிறப்பே புதுமை ஆச்சே

இங்கே சமாதானத்தை
தந்திடு.. நீ
புதுமையை ஒன்றொன்றாய் 
காட்டிடு..
அன்பை எங்கும் 
பரப்பிடு,
ஆணவ அலைகளை
அடக்கிடு,
துன்ப மலைகளை
உடைத்திடு,
கருணை மழையினை
பொழிந்திடு..

உயர்ந்தவர் புகழினை
இறக்கதே..
ஏழைகள் வயிற்றில் 
அடிக்காதே..
நண்பரை நீ
பிரிக்காதே..
நன்றியை என்றும் 
மறவாதே..
ஆயுள் ரேகையை
அழிக்காதே...
விலைகளை தினமும்
கூட்டாதே..

எங்கும் எதிலும் காதல் 
கொண்டு....உன்
புதுமைகள் அனைத்தையும்
புரிந்துடு......

தமிழ் நிலா 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள்

Sanjay Thamilnila said...

nanrikal....thamil thoddam...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...