பாடசாலை எங்கும் ஆசிரியர் தினம் கொண்டாட பட்டாலும் ஆசிரியர்களுக்குரிய மதிப்பை கொடுப்பதில்லை... அவர்களது பணியை உணர்வதில்லை

உலகத்தில் பல தினம் இருக்கு
உமக்கும் ஒரு தினம் இருக்கு,
அன் நாளில், தரணியில் புகழ் சேர்க்க
எமக்கு ஒளி ஊட்டும் இறைவா உமக்கு
மலர் சூடுகிறோம் உம் குழந்தைகளாக....!
தினம் தினம் நீர் விளித்து
எமை உயர வைத்தாய்...
உறக்கம் ஏதும் இன்றி
எமை மேலே ஏறிவிட்டீர்...!
நீர் ஏறிய ஏணியில் எமை ஏற்ற
பல முறை விழுந்துவிட்டீர்...!
உம் காலில் நாம் விழுவதற்கு
இன் நாள் ஒன்று போதாது குருவே..!
நாளும் நீர் கூறும் அறிவுரை புளிக்கும் எமக்கு...
அது நம் வயது... எம் வெற்றியின் மறுகணமே
இனிக்கும் அவையே தேனாக... அது தான் எம் மனது..!
யார் யாரோ கல்லில் காணும் கருணையை
உம் உளத்தில் காணுகிறோம்...
பூமிக்கு வந்த தெய்வங்கள் நீங்களே....
நீங்கள் தேய்ந்து எமை வளர்த்திர்கள்...
வளர்ந்தோம் உம்மையே திரியாய் கொண்டு....
நீர் ஏற்றிய தீபம் என்றும் அணையாது...
உமை மறந்து எம் இதயம் ஒருநாளும் போகாது....!
உமை வாழ்த்த உயிர் உள்ள
சொற்கள் இன்றி தவிக்கின்றோம்....!
உங்கள் சந்தோசத்தை பார்த்து நாம்
ஊமையாகி போகின்றோம்...
தமிழ் நிலா



Tody Now
2 comments:
வாழ்த்துபவர்கள்
என்றும்
போற்றப்படவேண்டியவர்கள் .......
நன்றி Sir
Post a Comment