சுகமான சுமைகள் எல்லாம்
சுமக்கின்ற சுமைதாங்கி
சாயாமல் சாய்ந்திருக்கும்,
சகபாடி சகவாசம்...
ஒரு நொடி தாண்டி போகயில
நடிப்பாகி போனதனால்
உயிரான உறவெல்லாம்
வெறும் வேசமாக
தெரிந்ததனால்,
கரை சேரா படகொன்று
கவிழ்ந்தது நடு கடலினிலே.
உருவான நாள் முதலாய்
உருகாத நட்பொன்று
உடைந்தது இன்று தரணியிலே.............!!
தமிழ் நிலா



Tody Now

0 comments:
Post a Comment