என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

இன்னொரு கருச்சிதைவுதான்..


இன்னொரு கருச்சிதைவுதான்
புளுட்டோணியம் கரு
சிதைக்கப்படுகின்றது....

யுரேனியம் பிளக்கப்படுகிறது,
வளிமண்டலத்தில்,
நிலத்தடியில்,
வான்வெளியில்,
நீரடியில்...
எல்லாமே வெற்றி...
விஞ்ஞானிகள்
சிரித்துக்கொள்கிறார்கள்...

யாருக்கும் தெரியவில்லை..
அத்தனையும் தோல்வி...
கடவுள் சிரித்துக் கொள்கிறார்...

அணுமின் நிலையம்
மின்சாரம் உற்பத்தி செய்யவா...??
இல்லை... இல்லை...
மக்களை அடக்கம் செய்ய..
இலவசமாக சூரியன் இருக்கிறதே...
சூரியனும் அணு உலைதான்
அங்கே இருந்து மின்
எடுத்துக்கொள்ளுங்கள்...

இராவணனை  அடக்கி 
இராமன் ஆக்கமுடியுமா...
இராட்சசன் அடங்கிவிட மாட்டான்...

அணு உலைக்கு 
இத்தனை பாதுகாப்பென்றால் 
அது எத்தகைய கொடியது தெரியுமா...??

விஞ்ஞானிகளே 

கழிவுகளை என்ன செய்வது...
ஆழக்கடல் தாண்டிச் சென்று
சமுத்திரத்திற்குக் கீழே புதைத்து விடுவோமா..?
பூமியில் பள்ளம் தோண்டி
பாறைக்குழம்பில் கரைத்து விடுவோமா...?

இருப்பினும் 
சாம்பலில் கதிரியக்கம் 
நடந்து கொண்டேதான் இருக்கும்...

உங்களுக்காக ஒரு அவசர திட்டம்
அமுல் படுத்தப்படுகிறது..
உங்கள் சேவைக்காய்...

இலவசமாக உங்களுக்கு வீடுகள்..
அணு உலைக்கு அருகில்
இருகிறீர்களா...??

இரோசிமா, நாகசாகி மீது 
நடந்தவர்கள்
"குண்டு மனிதன் "
"சின்ன பையன்..."

நடந்த தடங்களே அழியவில்லை...
எப்படி எத்தனை... எத்தனை....

இதோ மீண்டும் தயாராகிறது
புதிய ஆயுதம்..
பெயரும் இட்டகிவிட்டது
"கடவுளுக்காக"

அணுகுண்டு ஒன்று
இலவசமாக வெடிக்கபோகிறது...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

14 comments:

Seeni said...

nalla
kavithai!

naanum ungalai polave-
anu ulaikalai veruppavan!

mikka nantri!

ஆத்மா said...

அழகு வரிகள்... வேதனைக் கருவில்....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

கொடுமையை தடுக்க யார் வருவாரோ...?

Thozhirkalam Channel said...

மனதை கனப்படுத்தும் வரிகள்...



தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..? சொடுக்குங்கள்

Sanjay Thamilnila said...

நன்றிகள் அண்ணா...

Sanjay Thamilnila said...

நன்றி சிட்டுக்குருவி

Sanjay Thamilnila said...

நன்றி தனபாலன் ஐயா

Sanjay Thamilnila said...

நன்றி தொழிற்களம் குழு

வெற்றிவேல் said...

வேதனை...வரிகள்...

Unknown said...

வேதனையை சரியாக கூறியுள்ளிர்கள்

Kalaimahan said...

//யாருக்கும் தெரியவில்லை.... அத்தனையும் தோல்வி... கடவுள் சிரித்துக்கொள்கின்றார்// சிந்திக்கத்தக்க நல்ல கவிதை. கடவுளின் படைப்புக்களை மேலும் படைக்க நினைப்பவர்கள் இதுபற்றி சிந்திப்பார்களாக!

Sanjay Thamilnila said...

நன்றி இரவின் புன்னகை

Sanjay Thamilnila said...

நன்றி Gnanam sekar sir

Sanjay Thamilnila said...

சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு, நன்றி அண்ணா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...