என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

திரும்பிப்பார்


முதியோர் தின நாளில்..ஒரு பெரியவரின் சுய தீர்ப்பு..


திரும்பிப்பார் மகனே..

அப்பா என கூப்பிட்ட நீ
இப்போ யாரப்பா என்கிறாய்...
உன் மனைவி வந்தபின்
யாரோ என பாக்கிறாய்..

வயிற்றில் சுமந்தாள் அன்னை,
அவளுக்கு வலிக்கவில்லை...
தோளில் தினம் சுமந்தேன்
எனக்கும் வலிக்கவில்லை...
என்னை நீ சுமக்கவில்லை..
இருந்தும் எனக்கு வலிக்குறது..

மாதாந்தம் பத்தாம் திகதி
தினம் வராதா சொல்வாயா..?
பத்தாயிரம் பென்சனுக்கு
எங்கிருந்து வருகிறது
திர்டீரென அன்பெல்லாம்..???

முதுமை வந்த பின்னல் என்
முகம் பார்த்தும் நீ உன்
முகம் திருப்பி போகையில்
துடிக்காத என் இதயமும்
நொடிக்கு இருதரம் துடிக்குதடா...

திரும்பிப்பார் மகனே..

சிறுவயதில் உன்
இரவு திருவிழாவை
ஒரு வயதில்
நான் கூற சிரித்திருக்கிறாய்...
ஒரு நாள் கட்டிலில்
போனதற்காய்
கடிந்து விழுந்தாய்..
உணர்வே இல்லாமல்
தான் போகுதடா
இது கூட புரியலையா...!!

திரும்பிப்பார் மகனே

ஆறு வயதில் ஒன்றை
அறுபதுதரம் கேட்டும்
சொல்லியிருக்கிறேன்..
ஆறு தரம் தான்
அன்பாய் கேட்டிருப்பேன்..
அறுபது வயது தான்
ஆகிறது..."உனக்கு
அறளை பேந்து விட்டது,
என்கிறாள்
உன் மனைவி..

உங்களுக்கு ஆடை
வாங்குகையில் எனக்கும்
ஒன்று வாங்குங்கள்..
குளிப்பது சிரமமாக
இருக்கிறது... அடிக்கடி
உடையையாவது
மாற்றிக்கொள்கிறேன்..

குழந்தைகள் கூட
நெருங்க மறுக்கிறாய்
முதுமை தொற்றிவிடும் என்றா?
திரும்பிப்பார் மகனே..
முன்பு எங்கள் வீட்டு
பூனையை அணைத்து
மகிழ்ந்திருக்கிறாய்
நினைவிருகிறதா...??

தொழுவத்தில்
மாடுகளுக்கு வைக்கும்
கஞ்சி கலராய் இருக்கிறது
தினம் தரும் தேநீரை விட..
சத்து உணவு கேக்கவில்லை
சாகடிக்க தந்தால் போதும்
செத்து விடுகிறேன்....
வங்கியில் காசிருக்கு..
காப்புறுதியும் செய்திருக்கு..
அது போதும் உனக்கு
சுடலை வரைக்கும்...

--------

குழந்தாய் பாவம் உங்கப்பா
தாங்கமாட்டார்..
தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
மனசெல்லாம்
மெசின் ஆகிப்போனாலும்..
முதியோர் இல்லம்
நிச்சயம் இருக்கும்..
அங்கே விட்டு விடுங்கள்..
அவனாவது நிம்மதியாய்
இருக்கட்டும்..!!

தமிழ் நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

1 comments:

Sanjay Thamilnila said...

நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...