என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

இனிய தமிழ் இனி


என் இனிய தமிழே
உலகத்தில் கண்முளித்தேன்
வாய் திறந்தேன் "அ"
அம்மா
அது தான் முதல் வார்த்தை..

தலைவைக்க மடிதந்தாள்
என் தாய்.
நான் உறங்க தாலாட்டானாள்
தமிழ் தாய்...
நான் வளர தமிழ் தந்தாள்
கல்லூரித்தாய்

கண்முழித்த மகன்
மம்மி என்றான்...
போப் இசை கேட்டுக்கொண்டிருந்த
மனைவி அவன் காதில்
கொழுவிவிட்டு எழுத்து போனாள்...
வாசலில் தயாராக நின்றாள்
ஒரு வயதான அவனின்
ஆங்கில ஆசான் தமிழ் வேந்தன் 

இனிய தமிழ் இனி
என்னாகுமோ..???

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...