என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

என் தேநீர்ப்பொழுதுகள்


என் தேநீர்ப்பொழுதுகள்

அம்மாவுடனும் தேநீருடனுமே
தொடங்குகின்றன என்
காலைகள் எல்லாமே..
என் காலைகளில் என்றுமே
தேநீர் இல்லாமலும் இல்லை..

வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் கொண்டு
குவளை நிறைக்கவில்லை 
என் தேனீர்ப் பொழுதுகள்...

அன்பும், காதலும் 
அறிவும் அக்கறையும் கொண்டு 
நிரம்பியிருக்கும்..
என் தேநீர்க்கோப்பை
சிலநேரங்களில்
குளிர்தேசத்து மதுக்குவளைபோல்
இருக்கும்
இன்னும் சிலநேரங்களில்
குருதி நிறைந்த கிண்ணம் போல்
இருக்கும்...

சூடான என் தனிமைகளை
இளம் சூடான தேநீர் அதிகமாக
எப்படியோ சரி செய்துவிடுகிறது..

அதிக யன்னலோர 
தென்றல் பொழுதுகளை...
தேடிப்பெற்ற மழைநேர 
சாரல் பொழுதுகளை...
என்றுமே விரும்பாத வெயிலின்
வியர்வைப் பொழுதுகளை...
தவமிருக்கும் பனியின்
குளிர்ப் பொழுதுகளை...
எப்படியும் கிடைக்கும் இரவின்
நிலவுப் பொழுதுகளை...
என்னுடன் பங்கிட்டிருக்கிறது
என் தேநீர்ப்பொழுதுகள்..

ஆரம்பிப்பது போலவே
அம்மாவுடனும் தேநீருடனுமே
முடிந்துவிடுகின்றன..
என்னை எனக்கே காட்டிக்கொள்ளும்..
என் எல்லா தேநீர்ப்பொழுதுகளும்...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேநீர்ப்பொழுதுகள் இனிமையானவை...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இணைக்கப்பட்ட படம் பிரமாதம்...!

Seeni said...

arumai..

Sanjay Thamilnila said...

நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...