என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

ஒவ்வொன்றாய் கடந்திருந்தது..




கூட்டினை வெறுத்து காட்டினுள் 
சுகந்திரக் காற்றை சுவாசிக்க 
தயாராகிற்று ஒரு பறவை 
கம்பிகள் உடைத்து 
வானத்தில் இறக்கை விரித்தது..

பால் வாசம்,
பனையோலைக்காற்றாடி,
ஒரு சோடி வண்ணத்துப் பூச்சி,
வீதி நிறைந்த பாதச்சுவடு..
அச்சடிக்கப்பட்ட தாள்கள் 
மஞ்சள் கழுத்து..
பாலக வாசம் 
சொல் இழப்பு..
கைத்தடி, 
சக்கர நாற்காலி, 
வரவேற்பு வளையங்கள் 
பொருத்தப்பட்ட மயானங்கள்...
வீதியோரம் ஒற்றை மரம்..
சாய்ந்தபடி ஒரு கிழவி...
ஒவ்வொன்றாய் கடந்திருந்தது..
இறக்கைகள் கழன்றிருந்தது..

அழுகையும், சிரிப்பும் பரவிய
ஒலியடுக்குகளைக் கிழித்து..
திட்டுத் திட்டாக
கொட்டிக்கிதாக்கும்
மேகக்கூட்டத்தைக் கலைத்து

எல்லை கிட்டாத வானத்தை
முறைத்தபடி
பின் தொடர்ந்துகொண்டேயிருந்தது
தாய்ப் பறவை.
பின்னால் மகள்ப் பறவை.

தமிழ்நிலா
காற்றுவெளி April 2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Sanjay Thamilnila said...

நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...