என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

தேர்தற்காலம்...!



போலிகள் கொடுத்து
காலிகள் நிரப்பப்ப..
சாலை எங்கிலும்
சோலையாய் மொய்த்தனர் 

மறைந்து திரிந்தவர்
உரிமை என்றனர்..
மறைந்தவர் கொண்டு 
உரிமை பேசினர்..?
மறந்து திரிந்தவர் 
உரிமை கேட்டனர்..

கொள்கை பேசியோர்
கொள்கை இழந்தனர்...?
கொள்ளை அடிப்பதற்காய்
வெள்ளை பூசினர்

வேட்டிகள் வந்தனர் 
சேலைகள் தந்தனர்...
நம் வாக்குகள் வேண்டி
பொய் வாக்குகள் தந்தனர்...

வீதிகள் வந்தன, மின்னும் வந்தது..
கற்பனை எல்லாம் சொற்களாய் வந்தது..
சொன்னவர் பின்னே வந்தவை எல்லாம் 
அன்றே போயின.. அன்றோடு போயின 

போனவர் வருவார், இல்லை 
அவர் பேரனார் வருவர்...
வருடங்கள் ஐந்து பறந்துடும் இங்கு..
மறக்காதே தம்பி அவைகள் விசஜந்து...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்...

மாறாதோ...?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...