அன்று நீ இட்ட புள்ளி .
நேற்று நீண்டு வளர்ந்திருந்தது..
பின்நாளில் வளைந்துகொண்டிருந்தது...
மீண்டும் அந்த ஒற்றைப்புள்ளி
பிறிதொருநாளில் வளரலாம்.
அதற்கு உன் பெயரிடு...
உன் தனிமைகளை விற்று
அதன் வெறுமைகளை நிரப்பிக்கொள்..
தொலைத்த வார்த்தைகளை தேடி
கண்களாலேனும் பேசப் பழகிக்கொள்..
இழந்தவை அதிகம் தான், இருந்தும்
மீட்டுப் பார்ப்போம்... முடிவில் மீளலாம்...
நானும் நீயும் வேறுபட்டவர்கள்..
நீ வெறுத்தவற்றை நான் விரும்புகிறேன்.
நான் விரும்புவதை நீ வெறுத்திருந்தாய்..
நமக்கிடையில் நீ இட்ட புள்ளி...
இப்போது நாம் மூவர்
நீ நான் அந்த ஒற்றைப்புள்ளி..
இன்னும் இணைக்கப்படாத
முடிந்த அந்த பிரிவிலிருந்து.....
தமிழ்நிலா
0 comments:
Post a Comment