என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

பிம்பம் உடைத்தல்...


என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை..
இருப்பினும்
இன்னமும் இருக்கிறது...

கசப்புகள் படைத்த
ஒரு படையலை
உண்டபதற்காய்
ஒரு குவளை விடம்
நிறைத்துவைத்துள்ளேன்....
இது முடியும் நேரம்

கடவுள் இன்றியும் இருக்கலாம்...
உள்ளே...
திரை அவிழ்கிறது
தீர்மானம் சிரிக்கிறது
சில சிதறிய நரக துளிகள்
வெளியே...

உன் விசையின் விகாரங்கள்
விலகியிருந்தது..
ஒரு கண்ணாடி முகம்
இரண்டாய் உடைந்திருந்தது...

நீயும் நானுமாய்...
நடுவில் நட்பு...

தமிழ்நிலா
உதயன் 29.06.2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நட்பு என்றும் தொடரட்டும்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...