என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

இன்னும் ஏதோ ஒன்று..



உழைப்பின் வாசம்..
நினைவுகளின் பிசுபிசுப்பு..
அன்பின் பரிதவிப்புக்கள் மீதமிருக்க
அத்தனையும் சூனியமாய்..- கூடவே..
அடையாளம் ஏதுமற்ற நான்,
அடையாளம் கண்ட நீ..

இடைவெளி நெருங்காத
குறும் பயணத்தின்
நீண்ட நேரத்தின் கடை நொடி அது..
நீ, நான் இன்னும் ஏதோ ஒன்று..
எதிரில்  நிறுத்தம்...
மீண்டும் பழகிய ஒன்று..
இருப்பினும் நின்று போன அதே
தரிப்பிடத்திலிருந்து
நீண்டு கொண்டது எம் பயணங்கள்...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

ரசிக்கவைக்கும் வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Athisaya said...

வணக்கம்..இப்படியாய் நின்றுபோன தரிப்புக்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆரம்பிக்கட்டும் உங்கள் பணயத்தின் நீண்டதொரு பரவசம்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...